Skip to main content
தனிமையில் ஓர் பின்னிரவுப் பொழுது . . .
ஊசியாய்
ஏறிடும்
மிக மெல்லிய போதை,
மழை ஊறி
சுவாசம் சில்லிடும்
குளிர் இரவு ,
பேரமைதி நிரம்பிய சாலையில்
மாநகரத்து ராஜாவாய்
தன்னந்தனியே வீறிட்டு பயணிக்கும்
வாகனம் ,
நிறைவான
இன்பம் யாதென
இதயம் உணரும் வேளையில் ,
பூத கணங்களின்
வரவேற்பாய்
எதிரே
மாநகர காவல் வாகனம் !!~
~ Pk
Comments
Post a Comment
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.