May 15, 2016

இன அழிப்பு நாள் - உலகெங்கிலும்....

ஆசுத்திரேலியாவில்


பெல்சியம்

சுகாட்லாந்தில்

பிரித்தானியா ( இங்கிலாந்து)

இத்தாலி

நெதர்லாந்து

நார்வே
யெர்மனி


கனடா

சுவிசர்லாந்து

டென்மார்க்

மே 29 இல். சென்னை, இந்தியா

May 13, 2016

ஓரம்போ , சீமான் வண்டி வருது

அதாகப்பட்டது மக்களே,
வானத்துல விமானம் பறக்குது,
தரையில் தொடர் வண்டி ஓடுது,
சாலையில் வண்டி ஓடுது.

இது சீமான் ஆதரவு பதிவல்ல.
ஆனா நம்ம மக்களுக்கு யார் நமக்கு என்ன செஞ்சாங்கன்னு பார்க்கிறத விட, அவங்க என்ன வச்சிருக்காங்க, என்ன செய்யறாங்கன்னு பார்க்கிறதில் மிகுந்த ஆர்வமும், அதிலொரு இன்பமும் உண்டு. அதனாலேயே நானறிந்த விடயங்களை இன்றுத் தெளிவாக சொல்லிவிடுகிறேன்.

அதில் மிகுதியா இந்த தமிழ் தேசிய எதிர்ப்பு கும்பல்கள் பேசுவது சீமான் என்ன வண்டி வச்சிருக்காரு தெரியுமா? அந்த வண்டி விலை தெரியுமா என்றுதான். அதிலும் முத்தாய்ப்பாக கடலூரில் நேற்று சீமானை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் த.பெ.தி.க. சென்னை மாவட்டச் செயலாளர் -ச.குமரன் அவர்கள் சீமான் 60 இலட்ச ரூபாய் வண்டி வைத்திருக்கிறார் என்று ஒரு போடு போட்டார்.
எனவே, அவர் வண்டி மட்டுமல்லாமல் மேற்படி எல்லா வண்டிகளையும் பத்தி இன்னைக்கு விரிவாக சொல்லிடறது நல்லதுன்னுதான் நானே பல வருடம் கழித்து களமிறங்கிட்டேன்.

சீமான் வண்டி

May 9, 2016

விலைப்பெண்ணின் உலகம்...

கூசும் கதிரொளியை பொருட்படுத்தாமல் கண்களை கசக்கியபடி மேலிருந்தவனை தள்ளிவிட்டு எழுந்திருக்கிறாள் அவள். போதையின் மணம் நிரம்பிய அறையின் மறைவுகளை வெளிச்சம்போட்டு வழியே
வெளியேற்றின அவள் திறந்த சாளரங்கள். 'சிறுக்கி மூஞ்சில் முழித்தாலே பாவம்' காதில் விழும் ஊராரின் ஏக வசவுகளை மேலாடையின் கொக்கிகளுடனே அணிந்துக்கொள்கிறாள், உடலெங்கும் உமிழப்பட்டு கறையாக்கப்பட்ட அவன் காமத்தின் மிச்சங்களை ஒற்றை சோம்பல் முறிப்பில் தூர எறிந்தபடி. காற்றின் வழி வரும் எல்லா வசவுகளையும் புன்னகையுடன் காதில் வாங்கிக்கொண்டும், கசக்கி எறியப்பட்ட சேலையை தேடிக்கொண்டும், பரிதாப மாந்தர்களின் ஏச்சுகளும் பேச்சுகளும் மனதில் ஒட்டாதபடி ஒற்றை பெருமூச்சுடன் மனதை உதறிக்கொள்கிறாள். அள்ளியெடுத்த சேலையை கட்டும்போதுதான் முதன்முறையாக முழுதாக புலப்படுகிறது முந்தைய இரவில் தன்னை புரட்டியெடுத்தவனின் முகம். யார் இவன்? காமப்பிசாசாகவோ திருடனாகவோ கட்சிக்காரனாகவோ பணம் கொண்டவனாகவோ ஊதாரி தகப்பனாகவோ மனைவியை காதலிக்கும் பொதுவான கணவனாகவோ இருக்கலாம். உடல் வளையாமல் வட்டிக்காசு கேட்டு வீட்டுக்கதவை தட்டுபவன், கணக்கு வைத்திருக்கும் 
வேளைக்கு உணவு தரும் உணவகம், உடல் விற்று கிடைப்பதில் 
உடல் கூசாமல் பங்கு கேட்கும் அங்காடி போக்கிரி, வாடகையெல்லாம் வேணாம் என்று 
மாதம் பிறந்தால் வாய்ப்புக்காக காத்திருக்கும் 
வீட்டுரிமையாளன், மிரட்டி கடன் வாங்கி குடிக்கும் குடிகாரன், ஏமாற்றி வயிறு வளர்க்கும் கேடுகெட்டவன், வாக்குக்காக எப்போதாவது வாசல் தேடி வரும்
அரசியல்வாதி என எல்லார் நினைவும் வந்துத் தொலைக்கிறது,
காமத்தை தரவிறக்கியவன் கொடுத்த அச்சடிக்கப்பட்ட அரச காகிதங்களை பொறுக்கியெடுக்கும்போது. அறையின் தாழ் திறந்த கணத்தில் ஒரு கணம் கண் மூடித் திறந்தது உலகம் 'இவளையெல்லாம் ஊரை விட்டு தொரத்தி விடணும்' முன்னெப்பதோ வந்துவிட்டுப் போனவன் சொன்னதை புன்சிரிப்புடன் கடந்து செல்கிறாள், ஊரை நினைத்தபடி. அப்பாவிப்பெண்ணுடனோ வளர் நங்கையோ... எங்கோ எப்படியோ இறக்கப்பட வேண்டியவை இவளோடு முடிந்துவிட்டதென மகிழ்ந்துக்கொள்கிறாள். முந்தைய இரவுகளின் நிகழ்வுகளை ஏதுமறியாதது போல பதிவு செய்தபடி ஓடிக்கொண்டிருந்தது மணிக்காட்டி. ~ பிசாசுக்குட்டி இரா.ச.எழிலன்