கருத்து அறியாத வயதில்
தன் வயதையொத்த எல்லா பாலர்களைப் போலவே
இவனும் திரிந்திருக்கலாம் .
விரல் சூப்புவதற்கு பதிலாக விரல்காட்டி சவால் விட்டிருக்கலாம் . பெற்றோர் , உற்றோர் சாட்சியன்றி நாம் எதையும் உறுதிப்படுத்த முடியாது .
ஆனால் , நானோ அப்படித்தான் நான் திரிந்தேன்
ஆட்காட்டி விரல் காட்டி மிரட்டியிருக்கிறேன் ,
சவால் விட்டிருக்கிறேன்
ஆனால் . எந்த நடிகனும் என்னை கவர்ந்ததே இல்லை .
' எம் புள்ள இரசினி இரசிகன் ' என என் பாலக நண்பர்களின் பெற்றோர் சிலாகித்து சொல்லும்போது கூட ....