Mar 31, 2012

இனி வரும் காலம் . . .

ஒரு இயக்கத்தின் சீரான வளர்ச்சி , சிறப்பான எதிர்காலம் என்பது அந்தந்த இயக்கத்தின் அடுத்த தலைமுறையின் கொள்கை பிடிப்பு , இயக்க கோட்பாட்டில் சரியாக இயங்குதல் , எண்ணிக்கை ( இரண்டாம் பட்சம் தான் ! ) ஆகியனவற்றை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படுகிறது .
 
http://tnsec.tn.nic.in/symbols/recognised%20party.jpg
அந்த வகையில் பார்த்தால் அடுத்த தலைமுறை தி மு க ஆதிகால திராவிட இயக்கத்தின் துளி சாயல் கூட இல்லாத முட்டாள் இளையோர்களால் நிரப்பப்பட்டிருக்கும் . கொள்கை என்றால் என்னன்னே தெரியாம பலர் இருக்காங்க . அசோக் என்ற அருமை நண்பர் ( பதிவர் அசோக் அல்ல ) தி மு க மொழிப் பற்றில் துளிக் கூட இல்லாமல் , திமுக கொள்கை  என்னவென்று தெரியாமல் தமிழ் வழிக் கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் , கேட்டால் தி மு க கட்சியாம் , கருணாநிதி தமிழின தலைவராம் . அண்ணே , கொள்கை என்றால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிரொலிக்கோணும்  இதை தான் நான் பல தடவை வலியுறுத்திக் கூறி வந்தேன் . நான் அமெரிக்காவில் வாழ்கிறேன் , நான் பல ஆண்களுடன் சுத்துவேன் , ஆனால் நான் தமிழச்சி என்பது எப்படி முரண் வாக்கியமோ அப்படித்தான் உங்கள் முட்டாள் ஈன செயலும் :)


* திராவிட இயக்க முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு சென்றிருந்த பொழுது அப்பகுதி இயக்கத்தின் தலைவர் மகன்தான் இளைஞர் குழு தலைவர் , மற்ற இயக்கத்தவரின் பிள்ளைகள் ( இரண்டு மூன்று ) இளைஞர் அணியினர் . ஆக மொத்தத்தில் எதிர்காலம் என்பது சந்தேகமே !!!


* தேமுதிக , பாமக போன்ற கட்சிகள் வழமையான ஆட் சேர்ப்பு வேலைகளில் ஈடுபட்டு கட்சியினை தொழில் போல நடத்தி வந்துவிடும் என்பதால் அவைகள் இதில் சேர்த்தி இல்லை.


* அதிமுக இளைஞர்களுக்கு அதன் கொள்கைகளை மூத்தோர்கள் நிச்சயம் படிப்பிக்க வேண்டும் . திராவிட கருத்துக்களோ , எண்ணமோ , பகுத்தறிவு சிந்தனைகளோ துளியும் இல்லை .


* மதிமுக - வேற்றுமை மறந்த இனப் பற்றாள இளைய தலைமுறையால் நிரப்பட்டிருக்கிறது . அவர்கள் கட்சி கொள்கையை விட இன , மொழி பற்றை அதிகம் விதைக்கிறார்கள் . இக்கால இளைஞர்கள் அரசியலை வெறுப்பவர்கள் , உயர் பதவியில் , தமிழகம் தாண்டிய மாநிலங்களில் இருப்பவர்கள் கூட விரும்பி இணைகின்றனர் அல்லது உடன் சேர்ந்து இயங்குவதை கண்டிருக்கிறேன் . மற்ற கட்சியினர் விமர்சனத்தை கண்டு வெறுப்படைவது என்பது கிடையவே கிடையாது !!!


* நாம் தமிழர் - அருமையான துவக்கம் . இயக்கமாக இருந்தபோதும் சரி ,கட்சியாக மாறிய போதும் சரி ... இளைஞர்கள் ஆர்வத்துடன் இணைந்தனர் . உணர்வோடு பெரும்பான்மையானோர் மறைமுகமாக தோள் கொடுத்தனர் . கட்சி துவக்க விழாவிற்கு 500 மைல் தொலைவிலிருந்துக் கூட நண்பர்கள் சென்றனர் .
அமெரிக்கா முதலிய நாடுகளில் கூட எனது  தோழர்கள்  ஆதரவாக இருந்தனர் . ஆனால் இன்றோ வெகு சிலரைத் தவிர குழம்பிய மனதோடு கூடிய இளைஞர்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது . விலைமதிக்க முடியாத இளைஞர் சக்தியை பாழ்படுத்தி விட்டார் . இதை சரிப்படுத்தினால் மட்டுமே ஒரு நல்ல எதிர்காலம் கொண்ட கட்சியாக நிலைநிறுத்த முடியும் . அதிலும் முக்கியமாக தன்னைவிட அரசியலிலும் , இன உணர்விலும் மேன்பட்ட வைகோ போன்றோரை தமது வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளாமல் , அவரை சீண்டும் , ஏளனமாய் பேசும் கட்சியினரை கண்டும் காணாமல் விடுவது மகா முட்டாள்தனம் . நம்மை அழிக்கும் எதிரிக்கும் மிக எளிதான விடயம் .

* மார்க்சிச்டு - மாணவர் இயக்கம் , வாலிபர் சங்கம் ன்னு உயிர்ப்போடு வருங்காலத்திற்காக தெளிவாக இருக்கும் இயக்கம் . பெரும்பாலும் ஏழை மாணவர்களை மட்டுமே கண்டதுண்டு மிஞ்சிப்போனால் நவீன கால கம்யூனிச்டுகள் இருப்பார்கள் . தெளிவானவர்களை கண்டுப்பிடிப்பது மகா கடினம் . கொள்கை நிலைப்பாடு என்றால் கண்ணு மண்ணு தெரியாமல் ஆதரிக்கும் தோழர்கள் உண்டு . பாகிச்தான் நமது நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் . நிச்சயம்மின்சாரம் அளிப்பது தப்பு இல்லை என்ற நிலைப்பாட்டை இந்நேரம் முடிவு செய்து இருப்பார்கள் . அந்த கால காம்ரேடுகளில் காணப்பட்ட நேர்மை , உறுதி , துணிவு இல்லை . 


* பெரியார் திராவிட கழகம் - கடவுள் மறுப்போடுஅறிவில் தெளிவான இளைஞர்களை கண்ட இயக்கம் . சாதி மறுப்பு என்று போராட கிளம்பினால் என்ன ஏதென்று கேட்காமல் உடன் வர இளைஞர் பலம் உண்டு . ஈழப் போராத்தின் போது தனியார் கணினி நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த சில தோழர்கள் கூட விடுமுறை கொடுத்து விட்டு வந்து இரயில் மறியல் போராட்டத்தில் உணர்வோடு ஈடுபட்டதை  கண்டிருக்கிறேன் . மூளைச்சலவை செய்து சேர்க்கப்பட்டதாக இதுவரை யாரையும் கண்டதில்லை . சிறப்பான இளைஞர் சக்தி கொண்ட இயக்கம் . சீமான் நாம் தமிழர் இயக்கம் துவக்கி அரசு அவரை புதுவை சிறையில் வைத்த போது கொள்கைகளை கண்டுக்கொள்ளாமல் ஒரு இன உணர்வாளராக அவர்களுக்கு கடும் கெடுபிடிகளை தாண்டி உணவு  கொண்டு போனது பெ தி க  இளைஞர்களே . இதை நிச்சயம் நாம் தமிழர் இயக்க நண்பர்கள் வைகோ வை கண்ணு மண்ணு தெரியாமல் எதிர்ப்பதற்கு முன் உணர வேண்டும் . உத்வேகத்துடன் விவேகானந்தர் கூறிய இளைஞர்கள் உள்ள தூய உணர்வுள்ள தமிழக புலிகள் இயக்கம்  . இன்னும் கற்பித்தல் தேவைப்படுகிறது இளைஞர்களுக்கு .


... கருத்து மோதல்களை கருதி மற்ற அமைப்புகளை பற்றி விவாதிக்க விரும்பவில்லை , வேறெதுவும் நினைவிலில்லை . அனைத்தும் எனது அனுபவத்தின் வாயிலாகவே பதியப்பட்டது . 
இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் , விடுபட்டத்தைப் பற்றிய  கேள்விகளையும்  பின்னூட்டமிடுங்கள் அல்லது பிசாசுக் குட்டி பகுதியில் தெரிவியுங்கள் .

அம்புடன் ,
பிசாசுக் குட்டி ~