Jul 14, 2011

இருபது ரூவா நோட்டு : சில நவீன கால ' கர்ண ' பிரபுக்களின் கதை !!!

அதிகாலை எட்டு மணி . . . (  யூத் டிஷ்னரில அப்படித்தான் இருக்கு ! )
அலாரம் ஒழுங்கா அடிக்குதா ன்னு டெஸ்ட் பண்ண சீக்கிரமே எழுந்து
வெயிட் பண்ணி டயர்ட் ஆகி தூங்கிய என்னை
ஒன்பது மணிக்கு அலாரமே எழுப்பியது !!!
.
அம்மா எங்க இருக்காங்கன்னு ' சாட்டிலைட் ' வெச்சு தேடாத குறையாக
தேடி கண்டுப்பிடித்தேன் ....  அவங்க  கண்களில் அகப்படாமல் தலைமறைவாக !
 .

' சிட்டி ' ரோபோ  வேகத்தில் , அதிரடியாய் சத்தமில்லாமல் கிளம்பி , வெகு நேரமாய் கப்போர்டை துழாவிக் கொண்டிருந்தேன் ( இல்லை இல்லை கிளறிக் கொண்டிருந்தேன் ! )
.
' இதையா தேடுற ' ......... திடீரென்று வந்த குரல் கேட்டு திரும்பினால் ,
தேடிக்கொண்டிருந்த டாக்குமெண்டுகளின் ' நகல்களோடு ' அம்மா !!!
வடிவேலு மாதிரி ' நா அப்படியே ஷாக் ஆகிட்டேன் !!!!! '
.
ஏன்னா .......
காலேஜ் சேர , அப்ளிகேஷன் வாங்கின நேரத்திலிருந்து வீட்டுக்கு தெரியாம எப்படியாவது  சீட் வாங்கியாகணும் என்று முழுக்க முழுக்க கவனமாக நடைபெற்றுக் கொண்டிருந்த   சீக்ரெட் ஆப்பரேஷன் !!!!
சிங்கிள் செகண்டில் புஸ் ஆனது !!!
.
 சரி என்ன செய்ய ..... ' ஹி ஹி ஹி ... காலேஜுக்கு ' என்று லைட்டா ஒரு இளிப்போடு வீட்டிலிருந்து ' எஸ் 'ஆனேன் !!

.
மணி  : 9:17 AM - அவசர அவசரமாக ' VAO ' OFFICE என்றழைக்கப்படும் ' கிராம நிர்வாக அலுவலகத்திற்கு போனேன் !!!
என்ன அருமையான ' நிர்வாகம் ' !
ஒன்பதரை வரை பூட்டியே கிடந்தது !!!!
.
ரசினி பட முதல் நாள் ஷோ மாதிரி ' கர்ணம் ' என்றழைக்கப்படும் விஏஓ வந்ததும் மக்கள் ஏழெட்டு பேர் உள்நுழைந்தனர் !
என் முறை வரும் வரை வரிசையிலேயே பல நிமிடம் காத்திருக்க வேண்டியதாய் போயிற்று !!!
எனக்கு முன்னாடி சென்ற பலரில் நான்கைந்து பேருக்கு அந்த சான்றிதழ் இல்லை , இந்த ஆவணம் இல்லை என்று திருப்பி அனுப்பினார் அந்த ' STRICT OFFICER '.
பார்ரா ........ அரசாங்க நிர்வாகம் அருமையா நடக்குது என்று மூக்கின் மேல் விரல் வைக்கப் போகும் அளவிற்கு வியந்த என் எண்ணத்தில் அரை லோடு மண் அள்ளிப் போட்டார் அந்த ' ஆஆஆபிசர் ! '
.
அவர் கேட்ட கேள்விகளுக்கு பின்னர் அவரை ஏன் ' சார் ' என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது ...
.
அந்த டுபாக்கூர் கேட்டது ,
  • ' எல்லா ஆவணமும் இருக்கா ?! '
Pk : இருக்கு சார் ! பாஸ்போர்ட் , ரேஷன் கார்டு , வோட்டர் ஐடி , முதற் கொண்டு இருக்கு இருப்பிடத்திற்கான சான்று !
( அதிகபட்ச ஆவணமான ' பாஸ்போர்ட் ' இருந்தாலே இருப்பிட சான்று கிடைத்து  விடும் என்ற எளிதான வழி இருப்பதால் ' அது ' அடுத்ததிற்கு தாவியது ! )
.

Jul 3, 2011

தனிமையில் ஓர் பின்னிரவுப் பொழுது . . .

ஊசியாய்
ஏறிடும்
மிக மெல்லிய போதை,
மழை  ஊறி
சுவாசம் சில்லிடும் 
குளிர் இரவு  ,
பேரமைதி  நிரம்பிய  சாலையில்
மாநகரத்து  ராஜாவாய்
தன்னந்தனியே  வீறிட்டு பயணிக்கும்
வாகனம் ,
நிறைவான 
இன்பம் யாதென
இதயம் உணரும் வேளையில் ,
பூத கணங்களின்
வரவேற்பாய்
எதிரே
மாநகர காவல் வாகனம் !!~
~ Pk